என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ராணி ராம்பால் பெயர் பரிந்துரை
Byமாலை மலர்2 Jun 2020 7:31 PM GMT (Updated: 2 Jun 2020 7:31 PM GMT)
இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான கேல் ரத்னா, அர்ஜுனா ஆகிய விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயரை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய புதன்கிழமை கடைசி நாளாகும்.
இந்நிலையில், இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஆக்கி சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் அணி, 2017-ல் ஆசியக் கோப்பைப் போட்டியை வென்றது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெறுவதற்கு ராணி ராம்பால் முக்கியப் பங்கு வகித்தார்.
2016-ல் அர்ஜூனா விருதும், 2020-ல் பத்மஸ்ரீ விருதும் வென்ற ராணி ராம்பால் தற்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7½ லட்சம் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான கேல் ரத்னா, அர்ஜுனா ஆகிய விருதுகளுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயரை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய புதன்கிழமை கடைசி நாளாகும்.
இந்நிலையில், இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஆக்கி சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் அணி, 2017-ல் ஆசியக் கோப்பைப் போட்டியை வென்றது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெறுவதற்கு ராணி ராம்பால் முக்கியப் பங்கு வகித்தார்.
2016-ல் அர்ஜூனா விருதும், 2020-ல் பத்மஸ்ரீ விருதும் வென்ற ராணி ராம்பால் தற்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.7½ லட்சம் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X