என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீராபாய் சானுக்கு அர்ஜுனா விருது வழங்க பரிந்துரை
Byமாலை மலர்28 May 2020 4:27 AM GMT (Updated: 30 May 2020 4:38 PM GMT)
மீராபாய் சானு பெயரை அர்ஜுனா விருதுக்கு இந்திய பளுதூக்குதல் சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய பளுதூக்குதல் வீராங்கனையும், முன்னாள் உலக சாம்பியனுமான மீராபாய் சானு ஏற்கனவே இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதை 2018-ம் ஆண்டு பெற்று இருக்கிறார். இந்த நிலையில் அவரது பெயரை அர்ஜுனா விருதுக்கு இந்திய பளுதூக்குதல் சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. பளுதூக்குதலை சேர்ந்த ரஹலா வெங்கட் ராகுல், பூனம் யாதவ் ஆகியோரது பெயரும் அர்ஜுனா விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
25 வயதான மீராபாய் சானு கூறுகையில், ‘கேல்ரத்னா விருது மிக உயரியது என்பதை அறிவேன். அதே நேரத்தில் ஆரம்பத்தில் நான் அர்ஜுனா விருதை தவற விட்டிருக்கிறேன். அதையும் பெற வேண்டும்.
எல்லா வீரர்களுக்கும் அர்ஜுனா விருது வாங்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும்’ என்றார்.
ஏற்கனவே கேல்ரத்னா விருதை பெற்ற ஒருவரது பெயரை பிறகு அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று பளுதூக்குதல் பொதுச்செயலாளர் சஹாதேவ் யாதவ் கூறுகையில், ‘இது சாத்தியமே’ என்று பதில் அளித்தார்.
இந்திய பளுதூக்குதல் வீராங்கனையும், முன்னாள் உலக சாம்பியனுமான மீராபாய் சானு ஏற்கனவே இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதை 2018-ம் ஆண்டு பெற்று இருக்கிறார். இந்த நிலையில் அவரது பெயரை அர்ஜுனா விருதுக்கு இந்திய பளுதூக்குதல் சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. பளுதூக்குதலை சேர்ந்த ரஹலா வெங்கட் ராகுல், பூனம் யாதவ் ஆகியோரது பெயரும் அர்ஜுனா விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
25 வயதான மீராபாய் சானு கூறுகையில், ‘கேல்ரத்னா விருது மிக உயரியது என்பதை அறிவேன். அதே நேரத்தில் ஆரம்பத்தில் நான் அர்ஜுனா விருதை தவற விட்டிருக்கிறேன். அதையும் பெற வேண்டும்.
எல்லா வீரர்களுக்கும் அர்ஜுனா விருது வாங்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும்’ என்றார்.
ஏற்கனவே கேல்ரத்னா விருதை பெற்ற ஒருவரது பெயரை பிறகு அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று பளுதூக்குதல் பொதுச்செயலாளர் சஹாதேவ் யாதவ் கூறுகையில், ‘இது சாத்தியமே’ என்று பதில் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X