என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் டிசம்பர் மாதம் இந்திய ஓபன்: உலக பேட்மிண்டன் பெடரேசன் அறிவிப்பு
Byமாலை மலர்22 May 2020 11:49 AM GMT (Updated: 22 May 2020 11:49 AM GMT)
மார்ச் மாதம் நடைபெற இருந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர், டிசம்பர் மாதம் நடைபெறும் என உலக பேட்மிண்டன் பெடரேசன் தெரிவித்துள்ளது.
உலக டூர் சூப்பர் பேட்மிண்டன் தொடரான இந்தியா ஓபன் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை டெல்லியில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் 8-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை இந்தத் தெடர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் பெடரேசன் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தொடர்களில் ஒன்றாக இந்திய ஓபன் கருதப்படுகிறது. ஐதராபாத் ஓபன் ஆகஸ்ட் 11-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரையும், சையத் மோடி சர்வதேச ஓபன் நவம்பர் 17-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நியூசிலாந்து ஓபன், இந்தோனேசியா ஓபன், மலேசியாக ஓபன், தாய்லாந்து ஓபன் மற்றும் சீனாவில் நடைபெற இருந்த உலக டூர் பைனல்ஸ் ஆகியவற்றின் தேதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X