என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாண்டிங்குக்கு ரோகித் சர்மா புகழாரம்
Byமாலை மலர்20 May 2020 5:58 AM GMT (Updated: 20 May 2020 5:58 AM GMT)
ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கி 2 உலக கோப்பையை வென்று கொடுத்த பாண்டிங்குக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி. எல். போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் உரையாடலில் கூறியதாவது:-
ரிக்கி பாண்டிங் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர் என்றே நான் கருதுகிறேன். ஒருவரிடம் உள்ள அபார திறமையை எப்படி வெளியே கொண்டு வருவது என்பதை செய்து காட்டுவதில் அவர் கைதேர்ந்தவர். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கி 2 உலக கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். எனவே பெரிய போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது எப்படி? என்பது அவருக்கு நன்கு தெரியும்.
2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டிங்கை ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் முதல் 6 ஆட்டங்களில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்பதால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் என்னை அழைத்து கேப்டன் பதவியை ஒப்படைத்தார். அந்த சீசனில் அவர் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய இரு பணிகளையும் கவனித்தார். எனக்கு உதவி செய்ய அவர் எப்போதும் தயாராக இருந்தார். இளம் வீரர்களுக்கு நல்ல உத்வேகம் அளித்தார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 4 முறை மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி. எல். போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் உரையாடலில் கூறியதாவது:-
ரிக்கி பாண்டிங் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர் என்றே நான் கருதுகிறேன். ஒருவரிடம் உள்ள அபார திறமையை எப்படி வெளியே கொண்டு வருவது என்பதை செய்து காட்டுவதில் அவர் கைதேர்ந்தவர். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கி 2 உலக கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். எனவே பெரிய போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது எப்படி? என்பது அவருக்கு நன்கு தெரியும்.
2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டிங்கை ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் முதல் 6 ஆட்டங்களில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்பதால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் என்னை அழைத்து கேப்டன் பதவியை ஒப்படைத்தார். அந்த சீசனில் அவர் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய இரு பணிகளையும் கவனித்தார். எனக்கு உதவி செய்ய அவர் எப்போதும் தயாராக இருந்தார். இளம் வீரர்களுக்கு நல்ல உத்வேகம் அளித்தார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 4 முறை மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X