search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து கால்பந்து வீரர் டேல் அலி
    X
    இங்கிலாந்து கால்பந்து வீரர் டேல் அலி

    இங்கிலாந்து கால்பந்து வீரரை கத்தி முனையில் மிரட்டி கொள்ளை அடித்த கும்பல்

    இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரரான டேல் அலியின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், கத்தி முனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரர் டேல் அலி. இவர் இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து லீக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் லாக்டவுன் அமலில் இருப்பதால் டேல் அலி வீட்டிற்குள்ளேயே இருக்கிறார். நேற்றிரவு திடீரென கொள்ளையர்கள் டேல் அலி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர்.

    அப்போது டேல் அலி தடுக்க முயன்றுள்ளார். கொள்ளையர்களில் ஒருவர் டேல் அலியின் முகத்தில் பஞ்சு ஒன்று வைத்துள்ளார். அத்துடன் விடாமல் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் உள்ள தங்க நகைகள் மற்றும் வாட்ச்களை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்த செய்தி டெய்லி மெய்ல் பத்திரிகையில் வெளியானது. இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் நலம் விசாரிக்க தொடங்கினர்.

    நடந்த சம்பவம் உண்மை என்று கூறிய டேல் அலி, ‘‘இந்த சம்பவம் பயங்கரமான அனுபவம். தற்போது நன்றாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×