search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோஸ் பட்லர்
    X
    ஜோஸ் பட்லர்

    ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும்

    கிரிக்கெட் வீரர்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதத்தில் இருந்து நடைபெறாமல் உள்ளது. தற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

    இதனால் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘இன்னும் இரண்டு வாரங்களில் வீரர்கள் பயிற்சிகளை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிந்து கொண்டேன். தனிப்பட்ட வீரர்கள் சமூக இடைவெளியுடன் பயிற்சிகளை தொடங்க முடியும். குறைந்தபட்சம் பயிற்சியாளருடன் ஒரு வீரர் பயிற்சியில் ஈடுபடலாம். பேட்ஸ்மேனாகிய எனக்கு ஒருவர் பந்து வீச முடியும். இதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

    நாங்கள் தனியாக இருக்கிறோம். எங்களுடைய தனிப்பட்ட வாகனத்தில் செல்ல முடியும். நேராக வலைப்பயிற்சிக்கு சென்ற பின்னர், வீட்டிற்கு திரும்ப முடியும். நாமே நமக்கான முடிவுகளை எடுத்துக் கொள்ள முடியும். நமக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும், வசதியாக இல்லை என்றாலும் நமக்காக மற்றவர்களை நெருக்குடிக்குள்ளாக்க விரும்பக்கூடாது’’ என்றார்.
    Next Story
    ×