என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்து வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டதை கண்டேன்: இன்சமாம்-உல்-ஹக்
Byமாலை மலர்7 May 2020 1:09 PM GMT (Updated: 7 May 2020 1:09 PM GMT)
கராச்சியில் குண்டு வெடிப்பு நடந்ததால் ஓட்டல் அறையில் தங்கியிருந்த நியூசிலாந்து வீரர்கள் பயத்தில் கண்ணீர் விட்டதை கண்டேன் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி 2002-ல் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முதல் டெஸ்ட் லாகூரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் முடிவடைந்ததும். 2-வது டெஸ்ட் கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெற இருந்தது.
இந்த போட்டியில் விளையாடுவதற்காக இரண்டு அணி வீரர்களும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
குண்டு வெடிப்பு காரணமாக வீரர்கள் தங்கியிருந்து ஓட்டலின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் நினைவு கூர்ந்துள்ளார்.
பயங்கரமான அந்த சம்பவம் குறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நாங்கள் கராச்சிக்கு சென்றிருந்த போது அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. லாகூர் போட்டி முடிந்த பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றது. எந்தவொரு வீரருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அது பயங்கரமான நாள்.
குண்டு வெடிப்பு நடந்த திசையில் என்னுடைய அறை இருந்தது. அந்த பக்கம் இருந்து கண்ணாடி உடைந்து மறுபக்கத்தில் உள்ள சுவரில் மோதியது. அந்த பக்கத்தில் இருந்த ஓட்டலின் அனைத்து அறைகளிலும் இதுபோன்று நடந்தன. நான் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்தேன். அப்போது நீச்சல் குளம் அருகில் நியூசிலாந்து வீரர்கள் அழுது கொண்டு இருப்பதை நான் பார்த்தேன்.
நான் கண்ணாடி உடைந்து சிதறுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது போலீஸ்காரர் என்னிடம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. உடனடியாக கீழே இறங்குங்கள் என்றார். நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக தொடரை ரத்து செய்து கொண்டு சொந்த நாடு திரும்பினார்கள். எங்கள் வீரர்கள் ஒரு வாரத்திற்கு தூங்கியிருக்க மாட்டார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X