என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது அசாருதீன்
    X
    முகமது அசாருதீன்

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவுவதற்காக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார் முகமது அசாருதீன்

    இந்திய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் உதவின்றி தவிக்கும் முன்னாள் வீரர்களுக்காக நிதி திரட்டி வரும் நிலையில், 10 லடசம் ரூபாய் வழங்க உறுதி செய்துயுள்ளார் முகமது அசாருதீன்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலாளர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு அரசு உதவி வருகிறது. இல்லாதவர்களுக்கு இருக்கும் நபர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய வீரர்கள், ரஞ்சி போட்டியில் மட்டுமே விளையாடிய முன்னாள் வீரர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் நிதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

    இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் நிதி திரட்டி அவர்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்தது. ரஞ்சி கோப்பை போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள சங்கத்தின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா முன்னின்று முயற்சிகளை மேற்கொண்டார்.

    இந்நிலையில் முகமது அசாருதீன் 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இதன்மூலம் 24 லட்சம் ரூபாய் நிதியை திரட்டியுள்ளதாக மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×