என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ-லீக் கால்பந்தில் எஞ்சிய ஆட்டங்கள் ரத்து: மோகன் பகான் அணி சாம்பியன்
Byமாலை மலர்19 April 2020 9:10 AM GMT (Updated: 19 April 2020 9:10 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மோகன் பகான் அணி ஐ-லீக் சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.லீக் கால்பந்து போட்டியில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்றன. இன்னும் 28 லீக் ஆட்டங்கள் எஞ்சி உள்ள நிலையில் அதற்குள் கொரோனா அரக்கன் ஊடுருவி விட்டதால் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால் இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்த மோகன் பகான் அணி (16 ஆட்டத்தில், 12 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன், 39 புள்ளி) ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த நிலையில், அந்த பட்டத்தை கைப்பற்றியதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ஐ-லீக் கமிட்டி, இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக கமிட்டியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X