என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்கா சென்றடைந்த கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்த இருக்கிறார்கள்
Byமாலை மலர்18 March 2020 8:35 AM GMT (Updated: 18 March 2020 8:35 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக இந்திய கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால், தென்ஆப்பிரிக்கா அணி சொந்த நாடு திரும்பியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. கடந்த 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் முதல் போட்டி நடக்க இருந்தது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
அடுத்த நாள் 2-வது போட்டிக்காக தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் லக்னோ சென்றடைந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பீதியால் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது.
இதனால் தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் சொந்த திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்ட அவர்கள் இன்று காலை தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தனர். பெரும்பாலான நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் அவர்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதில் தென்ஆப்பிரிக்காவும் ஒன்று.
இதனால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்த இருக்கிறார்கள். இதை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் தலைமை மருத்துவ அதிகாரி மஜ்ரா கூறுகையில் ‘‘இந்தியாவில் இருந்து திரும்பிய வீரர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியில் 14 நாட்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க சரியான வழிமுறையாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த காலக்கட்டத்தில் அவர்களில் யாருக்காவது அறிகுறி தென்பட்டால் அல்லது கவலை அளிக்கும்படி இருந்தால், அதற்கு ஏற்றபடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்’’ என்றார்.
அடுத்த நாள் 2-வது போட்டிக்காக தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் லக்னோ சென்றடைந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பீதியால் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது.
இதனால் தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் சொந்த திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்ட அவர்கள் இன்று காலை தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தனர். பெரும்பாலான நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் அவர்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதில் தென்ஆப்பிரிக்காவும் ஒன்று.
இதனால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் தன்னைத்தானே 14 நாட்கள் தனிமைப்படுத்த இருக்கிறார்கள். இதை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் தலைமை மருத்துவ அதிகாரி மஜ்ரா கூறுகையில் ‘‘இந்தியாவில் இருந்து திரும்பிய வீரர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சமூக இடைவெளியில் 14 நாட்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க சரியான வழிமுறையாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த காலக்கட்டத்தில் அவர்களில் யாருக்காவது அறிகுறி தென்பட்டால் அல்லது கவலை அளிக்கும்படி இருந்தால், அதற்கு ஏற்றபடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X