என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்து வீரர் பெர்குசனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
Byமாலை மலர்15 March 2020 8:42 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி நகரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய நியூசிலாந்து வீரர் லூக்கி பெர்குசனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்கள் இன்றி இந்தப் போட்டி நடந்தது. வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்ளவில்லை.
இந்தப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் சிட்னியில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். 24 மணி நேரம் அவரை கண்காணித்து பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் பெர்குசனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார்.
ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது.
இந்தப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் சிட்னியில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். 24 மணி நேரம் அவரை கண்காணித்து பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் பெர்குசனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார்.
ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X