என் மலர்
செய்திகள்

மார்க் வுட்
இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மார்க் வுட் விலகல்
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி காலேயில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் இடம் பிடித்திருந்தார்.
சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா தொடரை இங்கிலாந்து முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பியது. அப்போது இருந்தே மார்க் வுட் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனையில் இடது பக்கம் இடுப்புப் பகுதியில் லேசான தசை முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாகிப் மெஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா தொடரை இங்கிலாந்து முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பியது. அப்போது இருந்தே மார்க் வுட் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனையில் இடது பக்கம் இடுப்புப் பகுதியில் லேசான தசை முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாகிப் மெஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story






