என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![இஷாந்த் சர்மா இஷாந்த் சர்மா](https://img.maalaimalar.com/Articles/2020/Feb/202002281631094643_Tamil_News_NZ-v-IND-2020-Injured-Ishant-Sharma-set-to-miss-the-second_SECVPF.gif)
X
இஷாந்த் சர்மா
மீண்டும் இஷாந்த் சர்மாவுக்கு காயம்: 2-வது டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம்...
By
மாலை மலர்28 Feb 2020 8:15 AM GMT (Updated: 28 Feb 2020 11:01 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கணுக்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 2-வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்தத் தொடருக்கு முன் இவர் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் உடற்தகுதியை நிரூபித்து முதல் டெஸ்டில் விளையாடினார்.
நாளை 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. இந்நிலையில் இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
நேற்று காலையில் வலைப்பயிற்சி மேற்கொண்ட இஷாந்த் சர்மா, மாலை நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் காயத்தின் தன்மை குறித்து தெளிவான அறிக்கை வெளியிடப்படும்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்தத் தொடருக்கு முன் இவர் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் உடற்தகுதியை நிரூபித்து முதல் டெஸ்டில் விளையாடினார்.
நாளை 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. இந்நிலையில் இஷாந்த் சர்மாவுக்கு மீண்டும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
நேற்று காலையில் வலைப்பயிற்சி மேற்கொண்ட இஷாந்த் சர்மா, மாலை நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் காயத்தின் தன்மை குறித்து தெளிவான அறிக்கை வெளியிடப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)