என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்கிறார் ஜோஸ் பட்லர்
Byமாலை மலர்27 Feb 2020 11:18 AM GMT (Updated: 27 Feb 2020 11:18 AM GMT)
இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர், டி20 உலக கோப்பைக்கு ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.
இதற்கிடையில் ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மே மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும் இந்தத் தொடரை வெளிநாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த ஐபிஎல் லீக் டி20 உலக கோப்பை தொடருக்கு மிகச்சிறந்த பிளாட்பார்மாக இருக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘ராஜஸ்தான் அணியில் நான், பென் ஸ்டோக்ஸ், டாம் கர்ரன் ஆகியோர் உள்ளோம். ஒரே நாட்டைச் சேர்ந்த நாங்கள் இணைந்து விளையாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. நாங்கள் சேர்ந்து விளையாடுவது எங்களுக்கும், இங்கிலாந்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கும் சிறந்ததாக இருக்கும். தெரிந்த முகம் என்பதால் புதிய சூழ்நிலை, அதை சுற்றியுள்ள விஷயங்களை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.
ஐபிஎல் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கற்றுக் கொள்வதற்கு சிறந்த இடம். உலகின் சிறந்த டி20 தொடர். உலகின் தலைசிறந்த வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து விளையாடுகிறார்கள். முன்னாள் மற்றும் தற்போதைய சிறந்த வீரர்களுடன் அறையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
டி20 உலக கோப்பை இன்னும் வெகுதூரத்தில் இல்லை என்பதால் அவர்களாகவே அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். மிகப்பெரிய தொடரான டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் ஆகும்’’ என்றார்.
இதற்கிடையில் ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. மே மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும் இந்தத் தொடரை வெளிநாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த ஐபிஎல் லீக் டி20 உலக கோப்பை தொடருக்கு மிகச்சிறந்த பிளாட்பார்மாக இருக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘ராஜஸ்தான் அணியில் நான், பென் ஸ்டோக்ஸ், டாம் கர்ரன் ஆகியோர் உள்ளோம். ஒரே நாட்டைச் சேர்ந்த நாங்கள் இணைந்து விளையாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. நாங்கள் சேர்ந்து விளையாடுவது எங்களுக்கும், இங்கிலாந்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கும் சிறந்ததாக இருக்கும். தெரிந்த முகம் என்பதால் புதிய சூழ்நிலை, அதை சுற்றியுள்ள விஷயங்களை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.
ஐபிஎல் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கற்றுக் கொள்வதற்கு சிறந்த இடம். உலகின் சிறந்த டி20 தொடர். உலகின் தலைசிறந்த வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து விளையாடுகிறார்கள். முன்னாள் மற்றும் தற்போதைய சிறந்த வீரர்களுடன் அறையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
டி20 உலக கோப்பை இன்னும் வெகுதூரத்தில் இல்லை என்பதால் அவர்களாகவே அதிகமான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். மிகப்பெரிய தொடரான டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் ஆகும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X