search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரேக் மெக்மில்லன்
    X
    கிரேக் மெக்மில்லன்

    ‘நம்பர் ஒன்’ இந்தியா 4 நாட்களுக்குள் சரணடையும் என எதிர்பார்க்கவில்லை: கிரேக் மெக்மில்லன்

    இந்தியாவில் விளையாடியது போன்றே வெலிங்டனில் விளையாடியதால் அவர்கள் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது என நியூசிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் 165 ரன்களும், 2-வது இன்னிங்சில் 191 ரன்களும் மட்டுமே எடுத்தது.

    அத்துடன் 4-வது நாள் முதல் செசனுக்குள் ஆட்டம் முடிந்து விட்டது. இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியா நான்கு நாட்களுக்குள் சரணடையும் என பார்க்கவில்லை என்று முன்னாள் பேட்ஸ்மேன் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெக்மில்லன் கூறுகையில் ‘‘அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும்போது, நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை சரிசெய்து கொள்ளவில்லை. அவர்கள் இந்தியாவில் எப்படி பேட்டிங் செய்தார்களோ, அதேபோன்று வெலிங்டனிலும் பேட்டிங் செய்தார்கள்.

    பந்து மூட்டுக்கு மேல் பவுன்சராகாத போது, சில ஷாட்டுகளை கையை முன்னால் நீட்டி எளிதாக அடிக்கலாம். ஆனால் நியூசிலாந்தில் நீங்கள் அப்படி விளையாட முடியாது. அனுபவ வீரர்களான டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி பந்து வீச்சில் அசத்தினார்கள். வெலிங்கடன் டெஸ்ட் போன்று பந்து ஸ்விங் ஆகும்போது டிரென்ட் போல்ட் மற்றும் டிம் சவுத்தி மேதைகள். உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியா நான்கு நாட்களுக்குள் சரணடையும் என நான் பார்க்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×