என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுக்கு எதிராக முழு அணியுடன் களம் இறங்குவோம்: கேன் வில்லியம்சன்
Byமாலை மலர்12 Feb 2020 2:56 PM GMT (Updated: 12 Feb 2020 2:56 PM GMT)
உலகின் நம்பர் ஒன் அணியை எதிர்கொள்ள முழு அணியுடன் களம் இறங்குவோம் என கேன் வில்லியம்சன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது. இதனால் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரிலும் மோசமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், மேட் ஹென்றி இல்லாமல் களம் இறங்கியது. இருந்தாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை 3-0 என வீழ்த்தி அசத்தியது.
இந்நிலையில் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் அனைத்து வீரர்களும் உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உலகின் சிறந்த அணிக்கெதிராக விளையாட இருப்பது அற்புதமான வாய்ப்பு.
வீரர்கள் காயம் அடைவது விளையாட்டின் ஒரு பகுதிதான். சமீப காலமாக நாங்கள் வீரர்கள் காயத்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளோம். ஆனால், அதை ஒரு காரணமாக சொல்லக்கூடாது’’ என்றார்.
ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், மேட் ஹென்றி இல்லாமல் களம் இறங்கியது. இருந்தாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை 3-0 என வீழ்த்தி அசத்தியது.
இந்நிலையில் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் அனைத்து வீரர்களும் உடற்தகுதி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். உலகின் சிறந்த அணிக்கெதிராக விளையாட இருப்பது அற்புதமான வாய்ப்பு.
வீரர்கள் காயம் அடைவது விளையாட்டின் ஒரு பகுதிதான். சமீப காலமாக நாங்கள் வீரர்கள் காயத்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளோம். ஆனால், அதை ஒரு காரணமாக சொல்லக்கூடாது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X