search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா நிதான ஆட்டம்

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    ஹாமில்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

    இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.  முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சற்று அதிரடியாக ஆடினர். ஆனால் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. பிரித்வி ஷா 20 ரன்களிலும் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் விராட் கோலி ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி இணைந்தது. முதல் 10 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர்.

    சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்தார். ஷ்ரேயஸ் ஐயர் 37 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 
    Next Story
    ×