search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U19 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி
    X
    U19 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி

    U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா நுழையுமா?: பாகிஸ்தானுடன் நாளை மோதல்

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பையில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

    இந்திய அணி லீக் ஆட்டங்களில் இலங்கையை 90 ரன் வித்தியாசத்திலும், ஜப்பானை 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்னில் வீழ்த்தியது. இதேபோல் நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன.

    இந்திய அணி அரை இறுதியில் பாகிஸ்தானை நாளை (4-ந்தேதி) எதிர் கொள்கிறது. 4 முறை சாம்பியனான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் ஜெய்ஷ்வால் (207 ரன்) மிகவும் நல்ல நிலையில் உள்ளார். சக்சேனா, கேப்டன் பிரியம் கார்க், துருவ் ஜுரல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அணியில் உள்ளனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் (11 விக்கெட்), கார்த்திக் தியாகி (9 விக்கெட்), ஆகாஷ் சிங் (7 விக்கெட்) ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.

    பாகிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து (7 விக்கெட்), ஜிம்பாவே (38 ரன்) ஆகியவற்றை தோற்கடித்தது. வங்காள தேசத்துடன் மோதிய ஆட்டம் முடிவு இல்லை. கால் இறுதியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டில் வீழ்த்தியது.

    2 முறை உலக கோப் பையை வென்ற பாகிஸ்தான் அணி 6-வது தடவையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
    Next Story
    ×