search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த அங்கோலேகர்
    X
    அரைசதம் அடித்த அங்கோலேகர்

    U19 உலக கோப்பை: ஆஸ்திரேலியாவை 233 ரன்னுக்குள் சுருட்டி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா?

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பை தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 233 ரன்களே அடித்துள்ளது.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் சூப்பர் லீக் காலிறுதி 1-ல் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சக்சேனா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதிக அளவில் நம்பிய கேப்டன் பிரியம் கார்க் 5 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 54 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்

    அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜுரெல் 15 ரன்னில் வெளியேறினார். ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த வீர் 25 ரன்களும், பிஷ்னோய் 30 ரன்களும் சேர்த்தனர்.

    அங்கோலேகர் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் சேர்க்க இந்திய இளையோர் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது.

    அரைசதம் அடித்த பிஷ்னோய்

    இந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்தியா சாம்பியன் பட்டத்தை நினைத்து பார்க்க முடியும்.
    Next Story
    ×