search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காலின் முன்றோ
    X
    பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காலின் முன்றோ

    2வது டி20 கிரிக்கெட் - இந்தியா வெற்றி பெற 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

    ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற 133 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது நியூசிலாந்து அணி.
    ஆக்லாந்து:

    இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. 

    ஆக்லாந்தில் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், காலின் முன்றோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதலில் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை அதிகரித்தது.

    அணியின் எண்ணிக்கை 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து முன்றோ 33 ரன்னில் வெளியேறினார்.
    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது.

    கேன் வில்லியம்சன் 14 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 3 ரன்னிலும், ராஸ் டெய்லர் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. டிம் சிபெர்ட் 33 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
     
    இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.
    Next Story
    ×