என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பிளிஸ்கோவா வெளியேற்றம் - 4வது சுற்றில் ஹெலப், நடால்
Byமாலை மலர்25 Jan 2020 10:05 AM GMT (Updated: 25 Jan 2020 10:05 AM GMT)
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ஹெலப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) இன்று காலை நடந்த 3-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த பேப்லோ பஸ்டாவை எதிர் கொண்டார். இதில் நடால் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 5-வது வரிசையில் உள்ள டொமினிக் தீயம் (ஆஸ்திரியா) 6-2, 6-4, 6-7 (5-7), 6-4 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் பிரிட்சை வீழ்த்தினார்.
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், கடந்த முறை அரை இறுதிக்கு நுழைந்தவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியாவை எதிர் கொண்டார்.
30-வது வரிசையில் உள்ள அனஸ்டசியா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதேபோல 6-வது வரிசையில் உள்ள பென்சிக்கும் (சுவிட்சர் லாந்து) 0-6, 1-6 என்ற கணக்கில் அனட்டிடம் (எஸ்டோனியா) தோற்றார்.
4-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 6-11, 6-4 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த யுலியாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 17-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7, (4-7), 6-3 என்ற கணக்கில் இத்தாலியை சேர்ந்த கேமிலா ஜியோரியை தோற்கடித்தார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) இன்று காலை நடந்த 3-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த பேப்லோ பஸ்டாவை எதிர் கொண்டார். இதில் நடால் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 5-வது வரிசையில் உள்ள டொமினிக் தீயம் (ஆஸ்திரியா) 6-2, 6-4, 6-7 (5-7), 6-4 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் பிரிட்சை வீழ்த்தினார்.
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், கடந்த முறை அரை இறுதிக்கு நுழைந்தவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியாவை எதிர் கொண்டார்.
30-வது வரிசையில் உள்ள அனஸ்டசியா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதேபோல 6-வது வரிசையில் உள்ள பென்சிக்கும் (சுவிட்சர் லாந்து) 0-6, 1-6 என்ற கணக்கில் அனட்டிடம் (எஸ்டோனியா) தோற்றார்.
4-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 6-11, 6-4 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த யுலியாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 17-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7, (4-7), 6-3 என்ற கணக்கில் இத்தாலியை சேர்ந்த கேமிலா ஜியோரியை தோற்கடித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X