என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி தோல்வி
Byமாலை மலர்24 Jan 2020 9:33 AM GMT (Updated: 24 Jan 2020 9:33 AM GMT)
இஷான் கிஷன், விஜய் சங்கர், குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடிய போதிலும் இந்தியா ஏ அணி 29 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.
2-வது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 109 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. ஆனால் தொடக்க வீரர் ஜார்ஜ் வொர்க்கர் சிறப்பாக விளையாடி 135 விளாசினார்.
மெக்கொன்சி 56 ரன்களும், நீசம் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் அடிக்க நியூசிலாந்து ஏ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது.
பின்னர் 296 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணியின் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கெய்க்வார்டு 17 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மயங்க் அகர்வால் 37 ரன்னில் வெளியேறினார். 88 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா ஏ நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
அதன்பின் வந்த இஷான் கிஷன் (44), விஜய் சங்கர் (41), குருணால் பாண்டியா (51) வெற்றிக்காக போராடினர். இருந்தாலும் இந்தியா ஏ அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து ஏ 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 109 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. ஆனால் தொடக்க வீரர் ஜார்ஜ் வொர்க்கர் சிறப்பாக விளையாடி 135 விளாசினார்.
மெக்கொன்சி 56 ரன்களும், நீசம் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் அடிக்க நியூசிலாந்து ஏ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது.
பின்னர் 296 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணியின் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கெய்க்வார்டு 17 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மயங்க் அகர்வால் 37 ரன்னில் வெளியேறினார். 88 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா ஏ நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
அதன்பின் வந்த இஷான் கிஷன் (44), விஜய் சங்கர் (41), குருணால் பாண்டியா (51) வெற்றிக்காக போராடினர். இருந்தாலும் இந்தியா ஏ அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து ஏ 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X