search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரோலினா பிளிஸ்கோவா
    X
    கரோலினா பிளிஸ்கோவா

    ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் - 2-வது சுற்றில் பிளிஸ்கோவா: தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி

    ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.

    உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டினாவை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான பெலிண்டாபென்சிக் (சுவிட்சர்லாந்து) 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் அனாகரோலினாவை (சுலோவாக்கியா) தோற்கடித்தார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ‌ஷரபோவா (ரஷியா) தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். வைல்டுகார்டு மூலம் தகுதி பெற்ற அவர் 3-6, 4-6 என்ற நேர்செட் கணக்கில் குரோஷிய வீராங்கனை டோனாவெக்கிடம் தோற்றார். இதே போல 12-வது வரிசையில் உள்ள ஜான்ஹோண்டாவும் (இங்கிலாந்து) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    10-வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னணி வீரர்களில் ஒருவரான சிலிச் (குரோஷியா)தொடக்க சுற்றில் 6-3, 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் மவுட் டெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.

    தமிழக வீரர் குணேஸ்வரன் தொடக்க சுற்றிலேயே தோல்வி அடைந்தார். அவர் 4-6, 2-6, 2-7 என்ற கணக்கில் இடோவிடம் (ஜப்பான்) தோல்வி அடைந்தார்.

    ரோனிக் (கனடா), பாடிஸ்குடா (ஸ்பெயின்) போன்ற முன்னணி வீரர்களும் தோல்வி அடைந்தனர்.
    Next Story
    ×