search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி காக் போல்டாகிய காட்சி
    X
    டி காக் போல்டாகிய காட்சி

    போர்ட் எலிசபெத் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 209 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன்

    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 209 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா திணறியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்திருந்தது. டி காக் 63 ரன்னுடனும், பிலாண்டர் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் அனல் பறக்கும் வகையில் பந்து வீசினர். டி காக், பிலாண்டர் ஆகியோர் நேற்றைய ரன்னிலேயே ஆட்டமிழந்தனர். மகாராஜ் டக்அவுட் ஆனார். ரபடா 1 ரன் எடுக்க தென்ஆப்பிரிக்கா 209 ரன்னில் சுருண்டு பலோ-ஆன் ஆனது.  இன்று 1 ரன் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா.

    ஸ்டூவர்ட் பிராட் பந்தில் மகாராஜ் போல்டாகிய காட்சி

    ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட் வீழ்த்தினார். டாம் பெஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.  தென்ஆப்பிரிக்கா 290 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் இங்கிலாந்து பாலோ-ஆன் கொடுத்தது. ஆகவே தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×