என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா
Byமாலை மலர்19 Jan 2020 2:00 AM GMT (Updated: 19 Jan 2020 2:00 AM GMT)
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தது கொல்கத்தா அணி.
கொல்கத்தா:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-எப்.சி.கோவா அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என சமனிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 47-வது நிமிடத்தில் பிரித்தமும், 88-வது நிமிடத்தில் ரானேவும் கோல் அடித்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 2-0 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.
கொல்கத்தா அணி தான் ஆடிய 13-வது ஆட்டத்தில் பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
கோவா அணி தான் ஆடிய 13-வது ஆட்டத்தில் சந்தித்த 3-வது தோல்வி இது. முதலிடத்தில் இருந்து அந்த அணி 2-வது இடத்துக்கு இறங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X