என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வான்கடே மைதானத்தில் பனியின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது: இரவில் ஆராய்ந்த ஆஸி. பயிற்சியாளர்
Byமாலை மலர்12 Jan 2020 11:13 AM GMT (Updated: 12 Jan 2020 11:13 AM GMT)
சிறப்பாக பந்து வீசுவதற்காக வான்கடே மைதானத்தில் பனிப்பொழிவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆஸ்திரேலியா பயிற்சியாளர் அங்கு உலா வந்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளைமறுநாள் (14-ந்தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 17-ந்தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் 19-ந்தேதியும் நடக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது குளர்காலம் நிலவி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும். இதனால் பந்து ஈரப்பதமாகி பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகிவிடும்.
இதனால் போட்டியின்போது பனியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவதற்கு மெக்டொனால்டு நேற்றிரவு வான்கடே மைதானத்தில் உலா வந்துள்ளார். அப்போது பனியின் தாக்கம் எப்போது அதிகமாக இருக்கிறது, எப்போது குறைவாக இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்ததாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் ‘‘எங்கள் அணி தலைமை பயிற்சியாளர் நேற்றிரவு முகாமில் இருந்து வெளியே வந்தார். அப்போது எந்த நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்தார். யாருக்கு தெரியும். ஒவ்வொருவரும் யூகிக்கிறார்கள். ஒவ்வொருவரும் பனியை சமாளிப்பதற்கு தயாராகுவார்கள் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இன்று ஈரப்பந்தில் பயிற்சி மேற்கொள்வோம். போட்டி நடக்கும் அன்று எப்படி இருக்கிறது என்பதை காண காத்திருக்கிறோம். இது ஒன்றும் புதிதல்ல. எங்களுடைய ஊரிலும் பனிப்பொழி இருக்கிறது’’ என்றார்.
மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது குளர்காலம் நிலவி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும். இதனால் பந்து ஈரப்பதமாகி பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகிவிடும்.
இதனால் போட்டியின்போது பனியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவதற்கு மெக்டொனால்டு நேற்றிரவு வான்கடே மைதானத்தில் உலா வந்துள்ளார். அப்போது பனியின் தாக்கம் எப்போது அதிகமாக இருக்கிறது, எப்போது குறைவாக இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்ததாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் ‘‘எங்கள் அணி தலைமை பயிற்சியாளர் நேற்றிரவு முகாமில் இருந்து வெளியே வந்தார். அப்போது எந்த நேரத்தில் அதிகமான பனிப்பொழிவு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்தார். யாருக்கு தெரியும். ஒவ்வொருவரும் யூகிக்கிறார்கள். ஒவ்வொருவரும் பனியை சமாளிப்பதற்கு தயாராகுவார்கள் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இன்று ஈரப்பந்தில் பயிற்சி மேற்கொள்வோம். போட்டி நடக்கும் அன்று எப்படி இருக்கிறது என்பதை காண காத்திருக்கிறோம். இது ஒன்றும் புதிதல்ல. எங்களுடைய ஊரிலும் பனிப்பொழி இருக்கிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X