என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் வில்வித்தை பயிற்சியின்போது வீராங்கனையின் தோள்பட்டையில் பாய்ந்த அம்பு
Byமாலை மலர்10 Jan 2020 10:21 AM GMT (Updated: 10 Jan 2020 10:23 AM GMT)
அசாமில் வில்வித்தை பயிற்சியின் போது வீராங்கனையின் தோள்பட்டையில் அம்பு பாய்ந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் சபுயா என்ற இடத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அசாம் மாநிலத்திற்கான மையம் மைந்துள்ளது.
இங்கு அம்மாநிலத்தில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் 12 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, எதிர்பாராத விதமாக ஷிவாஞ்சினி கோஹைகன் என்ற சிறுமியின் தோள்பட்டை பகுதியை துளைத்தது.
இதனால் அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நேற்று உயர்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
வில்லிவித்தை பயிற்சியாளர் மார்சி என்பவர் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அவர் இல்லாத நிலையில் இந்த பயிற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இங்கு அம்மாநிலத்தில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் 12 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, எதிர்பாராத விதமாக ஷிவாஞ்சினி கோஹைகன் என்ற சிறுமியின் தோள்பட்டை பகுதியை துளைத்தது.
இதனால் அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நேற்று உயர்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
வில்லிவித்தை பயிற்சியாளர் மார்சி என்பவர் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அவர் இல்லாத நிலையில் இந்த பயிற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X