என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெஸ்ட் கிரிக்கெட் தூய்மையான வடிவம்: சச்சின் தெண்டுல்கர்
Byமாலை மலர்6 Jan 2020 3:03 PM GMT (Updated: 6 Jan 2020 3:03 PM GMT)
ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தூய்மையான வடிவம், அதில் கறை பட்டுவிடக் கூடாது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலனை செய்து வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்த போதிலும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘தற்போது நான்கு நாட்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு பின் மூன்று, இரண்டு என்பார்கள். பின்னர் டெஸ்ட் போட்டி தேவையில்லை என்பார்கள்’’ என தனது கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஆடுகளத்தின் கடினத்தன்மை குறைந்து வெடிப்புகள் உருவாகும். இது சுழற்பந்து பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதை சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதி.
சுழற்பந்து வீச்சாளர்களின் சாதகத்தை பறிப்பது நியாயம் தானா?. டி20 கிரிக்கெட் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் இருக்கிறது. தற்போது டி10 கிரிக்கெட் வந்துள்ளது. 100 பால் கிரிக்கெட் வர இருக்கிறது. கிரிக்கெட்டில் டெஸ்டுதான் தூய்மையான வடிவம். அதில் கறை பட்டுவிடக் கூடாது’’ என்றார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘தற்போது நான்கு நாட்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு பின் மூன்று, இரண்டு என்பார்கள். பின்னர் டெஸ்ட் போட்டி தேவையில்லை என்பார்கள்’’ என தனது கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஆடுகளத்தின் கடினத்தன்மை குறைந்து வெடிப்புகள் உருவாகும். இது சுழற்பந்து பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதை சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதி.
சுழற்பந்து வீச்சாளர்களின் சாதகத்தை பறிப்பது நியாயம் தானா?. டி20 கிரிக்கெட் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் இருக்கிறது. தற்போது டி10 கிரிக்கெட் வந்துள்ளது. 100 பால் கிரிக்கெட் வர இருக்கிறது. கிரிக்கெட்டில் டெஸ்டுதான் தூய்மையான வடிவம். அதில் கறை பட்டுவிடக் கூடாது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X