என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு டெஸ்ட் டாக்காவில்... வங்காளதேசத்தின் யோசனையை நிராகரித்தது பாகிஸ்தான்
Byமாலை மலர்6 Jan 2020 10:12 AM GMT (Updated: 6 Jan 2020 10:12 AM GMT)
பாகிஸ்தான் சென்று டெஸ்ட் போட்டியில் விளையாட தயங்கும் வங்காளதேசம், புதிய யோசனை கூறியதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
வங்காளதேசம் கிரிக்கெட் அணி பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல தயங்குகிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் விளையாட தயார் என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் திட்டவட்டமாக எங்கள் நாட்டில்தான் போட்டி நடக்கும் என்று கூறிவிட்டது. இது வங்காளதேசத்திற்கு தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது. பொதுவான இடத்தில் போட்டியை நடத்த வங்காளதேசம் விரும்புகிறது.
ஆனால் பாகிஸ்தான் வராவிடில் ஐசிசி-க்கு பிரச்சனையை கொண்டு செல்வோம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஒரு போட்டியை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாம். ஒரு போட்டியை டாக்காவில் நடத்தலாம் என புதிய யோசனையை வழங்கியது.
தற்போது இதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முற்றிலுமாக மறுத்துள்ளது. ‘‘தனிப்பட்ட முறையில் யோசனை வழங்கியது. அதை நாங்கள் நிராகரித்துள்ளோம். எங்களை வங்காளதேசம் வருமாறு அழைக்கிறது. இது விசித்திரமாக உள்ளது’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல தயங்குகிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் விளையாட தயார் என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் திட்டவட்டமாக எங்கள் நாட்டில்தான் போட்டி நடக்கும் என்று கூறிவிட்டது. இது வங்காளதேசத்திற்கு தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது. பொதுவான இடத்தில் போட்டியை நடத்த வங்காளதேசம் விரும்புகிறது.
ஆனால் பாகிஸ்தான் வராவிடில் ஐசிசி-க்கு பிரச்சனையை கொண்டு செல்வோம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ஒரு போட்டியை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாம். ஒரு போட்டியை டாக்காவில் நடத்தலாம் என புதிய யோசனையை வழங்கியது.
தற்போது இதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முற்றிலுமாக மறுத்துள்ளது. ‘‘தனிப்பட்ட முறையில் யோசனை வழங்கியது. அதை நாங்கள் நிராகரித்துள்ளோம். எங்களை வங்காளதேசம் வருமாறு அழைக்கிறது. இது விசித்திரமாக உள்ளது’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X