என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரித்வி ஷா எனக்கு சேவாக்கை நினைவு படுத்துகிறார்: வெங்சர்க்கார்
Byமாலை மலர்15 Dec 2019 9:07 AM GMT (Updated: 15 Dec 2019 9:07 AM GMT)
இளம் வீரரான பிரித்வி ஷா எனக்கு அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கை நினைவு படுத்துகிறார் என முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு உறுப்பினருமான வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா. டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார். மேலும், அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்று சாதனைப் படைத்தார். ஆனால் ஆஸ்திரேலியா தொடரில் விளையாட சென்றபோது காயத்தால் அணியில் இடம் பெற முடியாமல் போனது.
அதன்பின் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதாக தடைவிதிக்கப்பட்டது. தடையில் இருந்து மீண்ட அவர் சையத் முஷ்டாக் அலி டிராபில் விளையாடினார். தற்போது ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பிரித்வி ஷாவின் ஆட்டத்தை பார்க்கும்போது சேவாக்கை நினைவுப் படுத்துகிறார் என திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திலிப் வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவருடைய திறமையில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் சங்கடமான சோதனையை சந்தித்தார். ஏனென்றால், இருமல் டானிக்கில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருந்ததால் அந்த நிலை ஏற்பட்டது.
தற்போது அதிக அளவில் முதிர்ச்சி அடைந்துள்ளார். மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஏராளமான ஷாட்டுகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. ஏராளமான ஷாட்டுகளை பார்க்கும்போது அவர் எனக்கு சேவாக்கை நினைவு படுத்துகிறார்’’ என்றார்.
அதன்பின் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதாக தடைவிதிக்கப்பட்டது. தடையில் இருந்து மீண்ட அவர் சையத் முஷ்டாக் அலி டிராபில் விளையாடினார். தற்போது ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பிரித்வி ஷாவின் ஆட்டத்தை பார்க்கும்போது சேவாக்கை நினைவுப் படுத்துகிறார் என திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திலிப் வெங்சர்க்கார் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவருடைய திறமையில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் சங்கடமான சோதனையை சந்தித்தார். ஏனென்றால், இருமல் டானிக்கில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருந்ததால் அந்த நிலை ஏற்பட்டது.
தற்போது அதிக அளவில் முதிர்ச்சி அடைந்துள்ளார். மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஏராளமான ஷாட்டுகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. ஏராளமான ஷாட்டுகளை பார்க்கும்போது அவர் எனக்கு சேவாக்கை நினைவு படுத்துகிறார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X