search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல்கள் அடித்த உற்சாகத்தில் மெஸ்சி பவுலி
    X
    கோல்கள் அடித்த உற்சாகத்தில் மெஸ்சி பவுலி

    ஐஎஸ்எல் கால்பந்து - கேரளாவின் மெஸ்சி பவுலியின் அதிரடி கோல்களால் ஜாம்ஷெட்பூருடனான ஆட்டம் சமனானது

    கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், இரண்டாவது பாதியில் கேரளாவின் மெஸ்சி பவுலி அடித்த அதிரடி கோல்களால் ஜாம்ஷெட்பூருடனான ஆட்டம் சமனானது
    திருவனந்தபுரம்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கேரளா மாநிலம் கொச்சியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 36வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பிட்டி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார். இதனால் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியிலும் ஜாம்ஷெட்பூர் வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் வினீத் ஒரு கோல் அடித்தார். இதனால் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

    ஆனால், கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 75 மற்றும் 87வது நிமிடங்களில் கேரளா அணியின் மெஸ்சி பவுலி தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், கேரளா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்தது.

    இதன்மூலம், ஜாம்ஷெட்பூர் அணி தான் விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றி, 4 டிரா மற்றும் ஒரு தோல்வி என 13 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.

    கேரளா அணி தான் ஆடிய 8 போட்டிகளில் 1 வெற்றி, 3 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 7 புள்ளிகள் பெற்றது.
    Next Story
    ×