என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு: தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி
Byமாலை மலர்13 Dec 2019 9:27 AM GMT (Updated: 13 Dec 2019 9:27 AM GMT)
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுக்கு நீட்டித்து அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இங்கு 1934-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. 21 ஒரு நாள் போட்டிகளும், இரண்டு 20 ஓவர் ஆட்டங்களும் நடந்துள்ளன. ஏராளமான சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒரு நாள் போட்டி நடக்க உள்ளது.
புகழ்பெற்ற இந்த மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி இந்த ஸ்டேடியத்தை நிர்வகித்து வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரூபா குருநாத், செயலாளர் ராமசாமி ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விளையாட்டை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் ஆர்வத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருக்கும் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரி சம்பந்தமான பின்னடைவுகளை ஒழுங்குமுறைப்படுத்தி, அதை மீண்டும் திறந்து பயன்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
புகழ்பெற்ற இந்த மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி இந்த ஸ்டேடியத்தை நிர்வகித்து வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரூபா குருநாத், செயலாளர் ராமசாமி ஆகியோர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விளையாட்டை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் ஆர்வத்தை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த மைதானத்தில் சீல் வைக்கப்பட்டிருக்கும் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரி சம்பந்தமான பின்னடைவுகளை ஒழுங்குமுறைப்படுத்தி, அதை மீண்டும் திறந்து பயன்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X