என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடரை வெல்ல வேண்டும்: இது ஒன்றுதான் குறிக்கோள் என்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வால்ஷ்
Byமாலை மலர்9 Dec 2019 1:13 PM GMT (Updated: 9 Dec 2019 1:13 PM GMT)
2-வது போட்டியில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளரின் குறிக்கோள், இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்வதுதானாம்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ். அதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெய்டன் வால்ஷ் முக்கிய காரணம்.
அதிரடியாக விளையாடிய ஷிவம் டுபே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை வீழ்த்தினார் வால்ஷ். 2-வது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் அவர், தொடரை வெல்வதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெய்டன் வால்ஷ் கூறுகையில் ‘‘முக்கியமான நோக்கமே தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்... எல்லாமே சரியாக அமைந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாக நினைக்கவில்லை. நாங்கள் வலுவான பந்து வீச்சு அணி, ஒருமுறை சிறப்பாக பந்து வீசினால் எதிரணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்பதை தெரிந்திருந்தோம்’’ என்றார்.
அதிரடியாக விளையாடிய ஷிவம் டுபே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை வீழ்த்தினார் வால்ஷ். 2-வது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் அவர், தொடரை வெல்வதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெய்டன் வால்ஷ் கூறுகையில் ‘‘முக்கியமான நோக்கமே தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்... எல்லாமே சரியாக அமைந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாக நினைக்கவில்லை. நாங்கள் வலுவான பந்து வீச்சு அணி, ஒருமுறை சிறப்பாக பந்து வீசினால் எதிரணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்பதை தெரிந்திருந்தோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X