search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கொல்கத்தா அணி வீரர்கள்
    X
    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கொல்கத்தா அணி வீரர்கள்

    ஐஎஸ்எல் கால்பந்து - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடியது கொல்கத்தா

    கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை பந்தாடிய கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
    கவுகாத்தி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அசாம் மாநிலம் கவுகாத்தி யில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். 11வது நிமிடத்தில் டேவிட் வில்லியம்சும், 35 வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா பிரேஸ் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் கொல்கத்தா அணி 2-0 என முன்னிலை வகித்தது. 

    இரண்டாவது பாதியின் இறுதிக்கட்டத்தில் 94-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா மேலும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 3-0 என நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது.

    இதன்மூலம் கொல்கத்தா அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி மற்றும் 2 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
    Next Story
    ×