search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சூதாட்ட புகார் - கர்நாடக கிரிக்கெட் சங்க உறுப்பினர் கைது

    கே.பி.எல். சூதாட்டம் தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் சுதிந்திரா ஷிண்டேவை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலத்தில் நடந்த கர்நாடக பிரீமியர் லீக் (கே.பி.எல்.) கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த மேட்ச் பிக்சிங் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெங்களூர் போலீசார் இந்த சூதாட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேட்ச் பிக்சிங் தொடர்பாக முன்னணி வீரர்களான சி.எம்.கவுதம், அப்ரார் மற்றும் பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அஷ்பக் அலிதர் உள்பட 8 பேர் கைதாகி இருந்தனர்.

    இந்த நிலையில் கே.பி.எல். சூதாட்டம் தொடர்பாக கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் சுதிந்திரா ஷிண்டேயை பெங்களூர் போலீசார் இன்று கைது செய்தனர்.

    நேற்று முன்தினம் அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் அவர் கைதானார்.

    39 வயதான சுதிந்திரா ஷிண்டே 19 வயதுக்குட்பட்ட கர்நாடக அணியின் பயிற்சியாளராக உள்ளார். கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக பிரிவில் உறுப்பினராக இருக்கிறார். பெல்காவி பாந்தர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆவார்.

    Next Story
    ×