என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பகல் இரவு டெஸ்ட் - இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்
Byமாலை மலர்2 Dec 2019 7:43 AM GMT (Updated: 2 Dec 2019 7:43 AM GMT)
அடிலெய்டுவில் நடைபெற்று வரும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்ததால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் டிரிபிள் செஞ்சூரியும் (335 ரன்), மார்கஸ் லபுஸ்சேன் சதமும் (162ரன்) அடித்தனர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ‘பாலோ ஆன்’ நிலையை சந்தித்தது.
8-வது வீரராக களம் இறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா முதல் முறையாக சதம் அடித்தார். அவர் 113 ரன்னும், பாபர் ஆசம் 97 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் 6 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
387 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் என்ற பரிதாபத்தில் இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 248 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.
தொடக்க வீரர் ஷான் மசூத்தும், ஆசாத் சபீக்கும் 4-வது விக்கெட்டுக்கு கடுமையாக போராடினார்கள். பாகிஸ்தான் 32.1 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது. தற்போது வரை பாகிஸ்தான் அணி 77 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 226 ரன்களை எடுத்துள்ளது. அப்ரிடி 1 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 37 ரன்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர்.
லயன் 3, ஹசில்வுட் 2 விக்கெட்டும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடி வரும் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் டிரிபிள் செஞ்சூரியும் (335 ரன்), மார்கஸ் லபுஸ்சேன் சதமும் (162ரன்) அடித்தனர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ‘பாலோ ஆன்’ நிலையை சந்தித்தது.
8-வது வீரராக களம் இறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா முதல் முறையாக சதம் அடித்தார். அவர் 113 ரன்னும், பாபர் ஆசம் 97 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் 6 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
387 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் என்ற பரிதாபத்தில் இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 248 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.
தொடக்க வீரர் ஷான் மசூத்தும், ஆசாத் சபீக்கும் 4-வது விக்கெட்டுக்கு கடுமையாக போராடினார்கள். பாகிஸ்தான் 32.1 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது. தற்போது வரை பாகிஸ்தான் அணி 77 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 226 ரன்களை எடுத்துள்ளது. அப்ரிடி 1 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 37 ரன்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர்.
லயன் 3, ஹசில்வுட் 2 விக்கெட்டும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடி வரும் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X