search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் போட்டவரை பாராட்டும் சக வீரர்கள்
    X
    கோல் போட்டவரை பாராட்டும் சக வீரர்கள்

    ஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

    கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 1-0 என வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
    பனாஜி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கோவா மாநிலத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில்  ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ கேசில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
    இதனால் முதல் பாதியின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோவா அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
    Next Story
    ×