என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சையத் முஷ்டாக் அலி டிராபி சூப்பர் லீக்: மகாராஷ்டிராவை 90-ல் சுருட்டி டெல்லி வெற்றி
Byமாலை மலர்21 Nov 2019 10:46 AM GMT (Updated: 21 Nov 2019 10:46 AM GMT)
சையத் முஷ்டாக் அலி டிராபி சூப்பர் லீக்கில் மகாராஷ்டிராவை 90 ரன்னில் சுருட்டி டெல்லி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் நடைபெறும் முக்கியமான டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.
லீக் ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. 10 அணிகளும் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் அந்த குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள டெல்லி - மகாராஷ்டிரா அணிகள் சூரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தவான், தலால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 22 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
தலால் 13 பந்தில் 16 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷோரே 37 பந்தில் 48 ரன்களும், ஹிம்மத் சிங் 16 பந்தில் 32 ரன்களும் அடிக்க டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.
பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஷ்டிரா களம் இறங்கியது. தொடக்க வீரர் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 32 பந்தில் 42 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற மகாராஷ்டிரா 90 ரன்னில் சுருண்டது. இதனால் டெல்லி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லீக் ஆட்டங்கள் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. 10 அணிகளும் ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் அந்த குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள டெல்லி - மகாராஷ்டிரா அணிகள் சூரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தவான், தலால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 22 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
தலால் 13 பந்தில் 16 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷோரே 37 பந்தில் 48 ரன்களும், ஹிம்மத் சிங் 16 பந்தில் 32 ரன்களும் அடிக்க டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.
பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஷ்டிரா களம் இறங்கியது. தொடக்க வீரர் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 32 பந்தில் 42 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற மகாராஷ்டிரா 90 ரன்னில் சுருண்டது. இதனால் டெல்லி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X