search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபாய் நெகி
    X
    அபாய் நெகி

    சையத் முஸ்தாக் அலி கோப்பை - 14 பந்தில் அரைசதம் அடித்து மேகாலயா வீரர் சாதனை

    சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 14 பந்தில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மேகாலயா ஆல்-ரவுண்டர் அபாய் நெகி பெற்றுள்ளார்.
    வான்கடே:

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் (டி பிரிவு) மிசோரம் அணிக்கு எதிராக மேகாலயா ஆல்-ரவுண்டர் அபாய் நெகி 14 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதத்தை கடந்து பிரமிக்க வைத்தார்.

    சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இதுவாகும். இதற்கு முன்பு ராபின் உத்தப்பா 15 பந்துகளில் அரைசதத்தை எட்டியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

    27 வயதான அபாய் நெகி 50 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அவரது அதிரடி ஜாலத்தின் உதவியுடன் மேகாலயா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×