search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    காலை தொட்டு வணங்கிய ரசிகர்: அடிக்க வேண்டாம் என விராட் கோலி அன்பு கட்டளை

    பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்து காலை தொட்டு வணங்கிய அன்பு ரசிகரை கண்டிக்க வேண்டாம் என விராட் கோலி பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. நேற்றைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியபோது, பந்து வீச இந்திய அணி வீரர்கள் தயாராகி கொண்டிருந்தனர். ஆடுகளம் அருகே இந்திய அணி வீரர்களுடன் கேப்டன் விராட் கோலி பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது கேலரியில் இருந்து ரசிகர் ஒருவர் 6 அடி தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடினார். இந்திய வீரர்கள் அருகில் சென்ற அவர், திடீரென விராட் கோலியின் காலை தொட்டு வணங்கினார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை இழுத்துச் செல்ல ஓடி வந்தனர். அப்போது விராட் கோலி அந்த ரசிகரை தனது தோளுடன் அணைத்துக் கொண்டு பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி அவரை கண்டிக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொண்டார்.

    அந்த ரசிகர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுரஜ் பிஸ்ட் (வயது 22) என்றும், இந்தூரில் சமையல் வேலை செய்து வருகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×