search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷுப்மான கில்
    X
    ஷுப்மான கில்

    எனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது: ஷுப்மான் கில் சொல்கிறார்

    அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில். நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இரண்டிலும் 9 மற்றும் 7 ரன்கள் என விரைவில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், ஆடும் லெவனில் விளையாடவில்லை.

    அணியில் இடம் கிடைக்காவிடிலும், எனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அனைத்து தொடர்களிலும் என்னுடைய ஆட்டத்தில் வேகம் காட்டி, கடின உழைப்பின் மூலம் ரன்கள் அடிக்க முயற்சி செய்கிறேன்.

    டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக இருப்பதால் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த அணியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறேன். இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதனால் எனக்கு சிறந்த பாடமாக அமைந்தது.

    தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மாவின் பேட்டிங் டெக்னிக் உண்மையிலேயே மாறவில்லை. அவர் எப்படி ரன்கள் குவிக்கிறார் என்பது எல்லாம் மனநிலையில் கவனம் செலுத்துவதை பொறுத்துதான் அமைகிறது ’’ என்றார்.
    Next Story
    ×