என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது: ஷுப்மான் கில் சொல்கிறார்
Byமாலை மலர்13 Nov 2019 1:28 PM GMT (Updated: 13 Nov 2019 1:28 PM GMT)
அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில். நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இரண்டிலும் 9 மற்றும் 7 ரன்கள் என விரைவில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், ஆடும் லெவனில் விளையாடவில்லை.
அணியில் இடம் கிடைக்காவிடிலும், எனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அனைத்து தொடர்களிலும் என்னுடைய ஆட்டத்தில் வேகம் காட்டி, கடின உழைப்பின் மூலம் ரன்கள் அடிக்க முயற்சி செய்கிறேன்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக இருப்பதால் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த அணியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறேன். இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதனால் எனக்கு சிறந்த பாடமாக அமைந்தது.
தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மாவின் பேட்டிங் டெக்னிக் உண்மையிலேயே மாறவில்லை. அவர் எப்படி ரன்கள் குவிக்கிறார் என்பது எல்லாம் மனநிலையில் கவனம் செலுத்துவதை பொறுத்துதான் அமைகிறது ’’ என்றார்.
அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், ஆடும் லெவனில் விளையாடவில்லை.
அணியில் இடம் கிடைக்காவிடிலும், எனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அனைத்து தொடர்களிலும் என்னுடைய ஆட்டத்தில் வேகம் காட்டி, கடின உழைப்பின் மூலம் ரன்கள் அடிக்க முயற்சி செய்கிறேன்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக இருப்பதால் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த அணியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறேன். இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதனால் எனக்கு சிறந்த பாடமாக அமைந்தது.
தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மாவின் பேட்டிங் டெக்னிக் உண்மையிலேயே மாறவில்லை. அவர் எப்படி ரன்கள் குவிக்கிறார் என்பது எல்லாம் மனநிலையில் கவனம் செலுத்துவதை பொறுத்துதான் அமைகிறது ’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X