search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்
    X
    பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

    ‘பிங்க்’ பந்தில் தீவிரமாக பயிற்சி எடுக்கும் இந்திய வீரர்கள்

    கொல்கத்தா ஈடன் கார்டன் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தூரில் இந்திய வீரர்கள் இரவு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்தூரில் நாளைமறுநாள் (14-ந்தேதி) தொடங்குகிறது. கடந்த 10-ந்தேதி டி20 கிரிக்கெட் தொடர் முடிவடந்த நிலையில், இந்தூர் சென்ற இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    22-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்கும் 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. முதல் டெஸ்டிற்கும் 2-வது டெஸ்டிற்கும் இடையிலான இடைவெளி மிகக்குறைவாக இருப்பதால் இந்தூரிலேயே பிங்க் பந்தில் பயிற்சி எடுக்க இந்தியா விரும்பியது.

    இதனால் மாலை  5 மணி முதல் 6 மணி வரை வெளிச்சத்திற்கு கீழ் பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து தரும்படி மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டுக்கொண்டது. அதன்பேரில் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
    Next Story
    ×