என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி - இடமாற்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல்
Byமாலை மலர்12 Nov 2019 5:20 AM GMT (Updated: 12 Nov 2019 5:20 AM GMT)
இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இடமாற்றத்தை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு முறைப்படி அப்பீல் செய்துள்ளது.
கராச்சி:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 29, 30-ந் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் வற்புறுத்தியது. இதனை ஏற்று இந்த போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சமீபத்தில் அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் போட்டி நடைபெறும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம், இந்த முடிவை கைவிடும்படி சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு முறைப்படி அப்பீல் செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன தலைவர் சலீம் சைபுல்லா அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்த முழு தயாருடன் நாங்கள் இருக்கிறோம். பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை. போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எனவே போட்டியை இஸ்லாமாபத்தில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். எங்கள் வேண்டுகோள் ஏற்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார். பாகிஸ்தானின் அப்பீலுக்கு தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்கும்படி அகில இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தீர்ப்பாயம் வருகிற 18-ந் தேதி இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 29, 30-ந் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் வற்புறுத்தியது. இதனை ஏற்று இந்த போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சமீபத்தில் அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் போட்டி நடைபெறும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம், இந்த முடிவை கைவிடும்படி சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு முறைப்படி அப்பீல் செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன தலைவர் சலீம் சைபுல்லா அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்த முழு தயாருடன் நாங்கள் இருக்கிறோம். பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை. போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எனவே போட்டியை இஸ்லாமாபத்தில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். எங்கள் வேண்டுகோள் ஏற்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார். பாகிஸ்தானின் அப்பீலுக்கு தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்கும்படி அகில இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தீர்ப்பாயம் வருகிற 18-ந் தேதி இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X