என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சையத் முஷ்டாக் அலி டிராபி: உ.பி.யிடம் வீழ்ந்தது தமிழ்நாடு
Byமாலை மலர்11 Nov 2019 2:52 PM GMT (Updated: 11 Nov 2019 2:52 PM GMT)
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் தமிழ்நாடு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்தர பிரதேச அணி வீழ்த்தியது.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் தமிழ்நாடு அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உத்தர பிரதேசம் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் முரளி விஜய் - என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஜெகதீசன் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விஜய் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் 42 பந்தில் 51 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 41 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 14 பந்தில் 28 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் உபேந்த்ரா யாதவ் ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 70 ரன்கள் அடிக்க 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் மூலம் தமிழ்நாடு குரூப் ‘பி’-யில் 2-வது இடத்தில் உள்ளது.
டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் முரளி விஜய் - என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஜெகதீசன் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விஜய் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் 42 பந்தில் 51 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 41 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 14 பந்தில் 28 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் உபேந்த்ரா யாதவ் ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 70 ரன்கள் அடிக்க 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் மூலம் தமிழ்நாடு குரூப் ‘பி’-யில் 2-வது இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X