search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேச தொடக்க பேட்ஸ்மேன் முகமது நைம்
    X
    வங்காளதேச தொடக்க பேட்ஸ்மேன் முகமது நைம்

    2-வது டி20: இந்தியாவுக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம்

    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு  செய்தார்.

    அதன்படி வங்காளதேச அணியின் லிட்டோன் தாஸ், முகமது நைம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் ஜெட் வேகத்தில் வங்காள தேச அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

    பவர் பிளே-யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்தது. அதன்பின் வங்காளதேச அணியின் ஸ்கோர் உயர்வில் மந்த நிலை ஏற்பட்டது.

    லிட்டோன் தாஸ் 21 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். முகமது நைம் 31 பந்தில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    லிட்டோன் தாஸை ரன்அவுட் ஆக்கிய ரிஷப் பந்த்

    சவுமியா சர்கார் 20 பந்தில் 30 ரன்களும், மெஹ்முதுல்லா 21 பந்தில் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவர்களின் ஆட்டத்தால் வங்காளதேசம் 150 ரன்னை நெருங்கியது. வங்காளதேசம் 19 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் வங்காளதேசம் 9 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சாஹல் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×