search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொமினுல் ஹக்யூ
    X
    மொமினுல் ஹக்யூ

    கேப்டன் பதவி கிடைக்கும் என கனவில் கூட நினைத்தது கிடையாது: மொமினுல் ஹக்யூ சொல்கிறார்

    டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது எதிர்பார்க்காதது என வங்காளதேச வீரர் மொமினுல் ஹக்யூ தெரிவித்துள்ளார்.
    வங்காளதேச அணியின் கேப்டனாக இருந்தவர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டக்காரர்கள் அவரை அணுகிய சம்பவத்தை ஐசிசி-யிடம் தெரிவிக்காததால் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அவர் இந்திய தொடரில் இடம் பெறவில்லை. ஆகவே, வங்காளதேச டி20 அணியின் கேப்டனாக மெஹ்முதுல்லாவும், டெஸ்ட் அணி கேப்டனாக மொமினுல் ஹக்யூ-வும் நியமனம் செய்யப்பட்டனர்.

    இந்த பதவி ஏதிர்பார்க்காதது என டெஸ்ட் அணி கேப்டன் மொமினுல் ஹக்யூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் கேப்டன் பதவிக்கு தயாராகவில்லை. இது முற்றிலும் எதிர்பார்க்காதது. வங்காளதே அணியின் கேப்டனாகவோ அல்லது டெஸ்ட் அணி கேப்டனாகவோ நியமிக்கப்படுவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது.

    விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் சிறந்தவர். இதைப் பற்றி நினைக்கும்போது எனக்கு சிறந்த உணர்வாக இருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×