என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
100-வது டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் ஹிட்மேன்
Byமாலை மலர்6 Nov 2019 9:25 AM GMT (Updated: 6 Nov 2019 9:25 AM GMT)
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விளையாடுவதன் மூலம், 100-வது போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் ரோகித் சர்மா.
- சோயிப் மாலிக் 111 போட்டிகளில் விளையாடி முதல் இடம்
- ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- எம்எஸ் டோனி 98 போட்டிகளில் விளையாடி 3-வது இடம்
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் அவர் அணியை வழி நடத்தி செல்கிறார்.
நாளைய போட்டி ரோகித் சர்மாவுக்கு 100-வது 20 ஓவர் ஆட்டமாகும். 100-வது போட்டியில் விளையாட இருக்கும் முதல் இந்திய வீரர் ஆவார். சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஒருவர் மட்டுமே 100 இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.
சோயிப் மாலிக் 111 ஆட்டத்தில் விளையாடி 2263 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 99 போட்டியில் 2452 ரன் எடுத்துள்ளார். அப்ரிடி 99 ஆட்டத்திலும், டோனி 98 ஆட்டத்திலும் விளையாடி உள்ளனர். விராட் கோலி 93 போட்டியில் ஆடியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X