என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வெற்றி - இங்கிலாந்து அணி மீண்டும் தோல்வி
Byமாலை மலர்5 Nov 2019 7:05 AM GMT (Updated: 5 Nov 2019 7:05 AM GMT)
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நெல்சன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் நியூசிலாந்து 21 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடந்தது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.
கிராண்ட்ஹோம் 35 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), குப்தில் 17 பந்தில் 33 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் டாம்கரண் 2 விக்கெட்டும், சாம்கரண், மகமூத், பிரவுன், பார்க்கின்சன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டு இழப்புக்கு 166 ரன்னே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டேவிட் மலன் 34 பந்தில் 55 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), வின்ஸ் 39 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புக்னர் 2 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னெர், சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து அணி தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 5 போட்டி கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் வருகிற 8-ந் தேதி நேப்பியரில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் நியூசிலாந்து 21 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடந்தது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.
கிராண்ட்ஹோம் 35 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), குப்தில் 17 பந்தில் 33 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் டாம்கரண் 2 விக்கெட்டும், சாம்கரண், மகமூத், பிரவுன், பார்க்கின்சன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டு இழப்புக்கு 166 ரன்னே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டேவிட் மலன் 34 பந்தில் 55 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), வின்ஸ் 39 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புக்னர் 2 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னெர், சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து அணி தொடர்ந்து 2 ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 5 போட்டி கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது ஆட்டம் வருகிற 8-ந் தேதி நேப்பியரில் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X