என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20: நியூசிலாந்து அணி 21 ரன்னில் வெற்றி
Byமாலை மலர்3 Nov 2019 9:01 AM GMT (Updated: 3 Nov 2019 9:01 AM GMT)
வெலிங்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து டி20 போட்டித் தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 ஆட்டம் வெலிங்டனில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 28 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேம்ஸ் நீசம் 22 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். ஜோர்டான் 3 விக்கெட்டும், சாம் குர்ரான் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து அணியில் டேவிட் மலன் அதிக பட்சமாக 39 ரன்னும், ஜோர்டான் 19 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சான்ட்னர் 3 விக்கெட்டும், சவுத்தி, பெர்குசன், சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஆட்டம் வருகிற 5-ந்தேதி நெல்சனில் நடக்கிறது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 ஆட்டம் வெலிங்டனில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 28 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேம்ஸ் நீசம் 22 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். ஜோர்டான் 3 விக்கெட்டும், சாம் குர்ரான் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
177 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணி 19.5 ஓவர்களில் 155 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றதற்கு அந்த அணி பதிலடி கொடுத்தது.
இங்கிலாந்து அணியில் டேவிட் மலன் அதிக பட்சமாக 39 ரன்னும், ஜோர்டான் 19 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சான்ட்னர் 3 விக்கெட்டும், சவுத்தி, பெர்குசன், சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஆட்டம் வருகிற 5-ந்தேதி நெல்சனில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X