search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த மகிழ்ச்சியில் ஐதராபாத் அணி
    X
    கோல் அடித்த மகிழ்ச்சியில் ஐதராபாத் அணி

    ஐஎஸ்எல் கால்பந்து - கேரளாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது ஐதராபாத்

    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.

    கேரளா அணியின் ராகுல் 34-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

    இரண்டாவது பாதியில் ஐதராபாத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த அணியின் ஸ்டன்கோவிக் 54வது நிமிடத்திலும், பெரைரா 81வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி 2-1 என கேரளா அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 
    Next Story
    ×